Monday 31 December 2012

View Point: பந்தங்கள்.                             கோதைதனபாலன...

View Point:
பந்தங்கள்.                             கோதைதனபாலன...
: பந்தங்கள்.                             கோதைதனபாலன் நீருக்கும் மீனுக்கும் உறவு... நீருக்கும் தாமரைக்கும் உறவு.   மீனுக்கும் தாமரைக்கு...

பந்தங்கள்.                             கோதைதனபாலன்



நீருக்கும் மீனுக்கும் உறவு...
நீருக்கும் தாமரைக்கும் உறவு. 
மீனுக்கும் தாமரைக்கும் உறவுண்டோ ?



தாமரைக்கும் தும்பிக்கும் உறவானால் ..
அது நீருக்கும் உறவாகுமோ..?



பட்டும் படாது , தொட்டும் தொடாது 

கட்டி இழுக்கும் பந்தக் கயிறு 
கண்மறைவில் உணர்வுகள் அறிவதோ...!
இயற்கையின் விந்தை அன்றோ..!

View Point: இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2013 ...

View Point:
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2013 ...
: இனிய ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்..  2013 !

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2013 !

Friday 27 April 2012

View Point: என் இனிய நிலாவே !

View Point: என் இனிய நிலாவே !: கடல் மீது உன்னைக் கண்டு களிப்பார்   பலர்    மலை மீது உன்னைக் கண்டு மருகி  நிற்பார்  கானகத்தே கண்டும் காணாதிருப்பர் ஒரு சாரார் அகண்ட வெ...

என் இனிய நிலாவே !

கடல் மீது உன்னைக் கண்டு களிப்பார்   பலர்   
மலை மீது உன்னைக் கண்டு மருகி  நிற்பார்
 கானகத்தே கண்டும் காணாதிருப்பர் ஒரு சாரார்
அகண்ட வெளியில்  மனம் உய்யுற்றிருப்பார் மற்றவர்
பாலையில் துல்லியமாய் காண்போரும் சிலரே
நானோ தினம் தினம் என் முற்றத்தில்


தரிசிக்கிறேன் !   ரசிக்கிறேன் !! என் இனிய நிலாவே !


கோதைதனபாலன்.

Friday 24 February 2012

View Point: எது நல்வாழ்வு

View Point: எது நல்வாழ்வு: மண் கொஞ்சும் பசும் புல்லும் விண் துஞ்சும் நேரமது வீழும் ஆங்கொரு செடியது இலை விடும் காம்பொன்று மொட் டொன்று ஏந்தும் காற்று வருட இதழ்கள் வி...

எது நல்வாழ்வு

மண் கொஞ்சும் பசும் புல்லும்
விண் துஞ்சும் நேரமது வீழும்
ஆங்கொரு செடியது இலை விடும்
காம்பொன்று மொட் டொன்று ஏந்தும்
காற்று வருட இதழ்கள் விரிக்கும்
பரவும் மணத்தின் சுகந்தம் நிரந்தரம்
பாழும் மனம் வாழஎதை நாடும்
அன்றுதோன்றி அன்றுமடியும் புல்லா,
நின்று மணக்கும் மலர் செடியா.
முன்னது சுகமானால் பின்னதுசீரிய சிந்தையாமோ
!






கோதைதனபாலன்

Wednesday 8 February 2012

View Point: காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்ஒளி சிந்த...

View Point: காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்ஒளி சிந்த...: காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள் ஒளி சிந்துமோ, சுடர்விடுமோ ! இமைசாயும் கண்ணில் பதுங்கு மோ விழிகள் ! தந்திடுமோ வண்ணக் கனவுகள் !...
காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்
ஒளி சிந்துமோ,   சுடர்விடுமோ !
இமைசாயும் கண்ணில் பதுங்கு
மோ  விழிகள் !
தந்திடுமோ வண்ணக் கனவுகள் !
காலை வரை இதுவே   மாயம் என
ஆகாயம் காட்டும் வித்தை தானோ   !


                                           




 கோதைதனபாலன் 

Monday 6 February 2012

View Point: இரவு வணக்கம்

View Point: இரவு வணக்கம்: மறையும் கதிரவன் மலையுள் மறைந்தால் உறங்கும் விழிகள் கண்ணுள் மறையுமோ சுடரும் கதிர்கள் விடியல் அறியுமானால் ஊமை நினைவதனில் கனவுகள்...

இரவு வணக்கம்





மறையும் கதிரவன் மலையுள் மறைந்தால்  
உறங்கும் விழிகள் கண்ணுள் மறையுமோ 
சுடரும் கதிர்கள் விடியல் அறியுமானால்  
ஊமை நினைவதனில் கனவுகள் படருமோ !!  
 





கோதைதனபாலன்  












Saturday 28 January 2012

View Point: ஒரு இரவு வணக்கம்

View Point: ஒரு இரவு வணக்கம்: பகலது நனவோடுதான் காணும் உணர்வோடு இரவது நினைவோடுதான் உணரும் கனவோடு என்று சொல்லி சுழலுவதுதான் காலம் ....என விடை பெறும் நேரம் வந்தது ...

ஒரு இரவு வணக்கம்


பகலது நனவோடுதான்
காணும் உணர்வோடு

இரவது நினைவோடுதான்
உணரும் கனவோடு
என்று சொல்லி
சுழலுவதுதான் காலம் ....என

விடை பெறும் நேரம் வந்தது
விடியலை காண விரைந்து...




கோதைதனபாலன்








View Point: ஒரு கோலவெறி

View Point: ஒரு கோலவெறி: வெண்பனி அணைந்தால் வான் மடியில் கோலவெறி கொள்ளும் நிலவே இருள் சூழ்ந்து நின்றால் கொள்ளை அழகு கொள்வாயோ கண் மயங்க...

ஒரு கோலவெறி





வெண்பனி அணைந்தால் வான் மடியில்  
 
கோலவெறி கொள்ளும் நிலவே  
 
இருள் சூழ்ந்து நின்றால்  
 
கொள்ளை அழகு கொள்வாயோ   
 
கண் மயங்கினேனடி கனவு கலைக்காதே  
 
விடியும் வரை காத்திடு நல்ல மனங்களை...!  


கோதைதனபாலன்  

Saturday 14 January 2012

View Point: ஒரு விரக்தியின் நிழல்

View Point: ஒரு விரக்தியின் நிழல்: மீனவர் வாழுமிடம் பாலையாய்குறுகிய தனுஷ்கோடி அரிச்சமுனை வாழும் மக்களும் வாழ்த்தும் மக்களும் எப்புறமும் இருக்க ஒரு புற...

ஒரு விரக்தியின் நிழல்

 மீனவர் வாழுமிடம்  
பாலையாய்குறுகிய தனுஷ்கோடி  
அரிச்சமுனை  

 



வாழும் மக்களும் வாழ்த்தும் மக்களும் எப்புறமும் இருக்க 
 ஒரு புறம் ஒரு கோடியில்,  தனுஷ்கோடி விட்டு,

பலமுறை 
அரசு சொல்லியும், ஏற்ற இடம் அளித்தும்
வர மறுக்கும் மீனவ  அன்பர்களே !  
எங்களுக்கும் உங்கள் கவலையில் பங்குண்டு  

கடலுடன் பிறந்தவர் கடலோடு முடியட்டும் 
என்ற நினைவெதற்கு? இடையில்                                           ஒரு விரக்தியின் நிழல் 
யாரும் போவர் யாரும் வருவர். 
யார் நிற்பர் என்று யார் அறிவர் ?
கடல் கொள்ளும் உறவு மண்ணுடன்
என்றும் பொருந்துமோ? நிற்குமோ ?   
மண்கொள்ளும் உறவோ அது
மறைவது ,கரைவது பின் நிற்குமோ?                                                          கோதைதனபாலன் 
இருவரிடமும் உங்கள் உயிர் ,உறவுகள் 
ப்ணயக் கைதிகள், உங்கள் உணர்வுகள்
ஆர்பரிக்கும் அலைகள் அன்றி ஆழ்கடல் அமைதியாகா,
வீணே குறுகிவிட்ட நிலமீதில்,தனிமை படுத்தி 
வாழத்துடிப்பது யாரிட்ட சாபம்
உறவுகளை நினையுங்கள், விரக்திதனை தள்ளுங்கள்
விவேகம் கொள்ளுங்கள், வெற்றி நிலம் காணுங்கள்..!
இயற்கை போராட்டம் வெற்றியாகத்தான் மாறனும்
விரக்தியில் வீழல் கூடாது..
உங்கள் நினவின் நிழலாய்
மனம் உருகி உரைத்திட்டேன்...