Saturday, 14 January 2012

ஒரு விரக்தியின் நிழல்

 மீனவர் வாழுமிடம்  
பாலையாய்குறுகிய தனுஷ்கோடி  
அரிச்சமுனை  

 



வாழும் மக்களும் வாழ்த்தும் மக்களும் எப்புறமும் இருக்க 
 ஒரு புறம் ஒரு கோடியில்,  தனுஷ்கோடி விட்டு,

பலமுறை 
அரசு சொல்லியும், ஏற்ற இடம் அளித்தும்
வர மறுக்கும் மீனவ  அன்பர்களே !  
எங்களுக்கும் உங்கள் கவலையில் பங்குண்டு  

கடலுடன் பிறந்தவர் கடலோடு முடியட்டும் 
என்ற நினைவெதற்கு? இடையில்                                           ஒரு விரக்தியின் நிழல் 
யாரும் போவர் யாரும் வருவர். 
யார் நிற்பர் என்று யார் அறிவர் ?
கடல் கொள்ளும் உறவு மண்ணுடன்
என்றும் பொருந்துமோ? நிற்குமோ ?   
மண்கொள்ளும் உறவோ அது
மறைவது ,கரைவது பின் நிற்குமோ?                                                          கோதைதனபாலன் 
இருவரிடமும் உங்கள் உயிர் ,உறவுகள் 
ப்ணயக் கைதிகள், உங்கள் உணர்வுகள்
ஆர்பரிக்கும் அலைகள் அன்றி ஆழ்கடல் அமைதியாகா,
வீணே குறுகிவிட்ட நிலமீதில்,தனிமை படுத்தி 
வாழத்துடிப்பது யாரிட்ட சாபம்
உறவுகளை நினையுங்கள், விரக்திதனை தள்ளுங்கள்
விவேகம் கொள்ளுங்கள், வெற்றி நிலம் காணுங்கள்..!
இயற்கை போராட்டம் வெற்றியாகத்தான் மாறனும்
விரக்தியில் வீழல் கூடாது..
உங்கள் நினவின் நிழலாய்
மனம் உருகி உரைத்திட்டேன்... 

No comments:

Post a Comment