Friday 24 February 2012

View Point: எது நல்வாழ்வு

View Point: எது நல்வாழ்வு: மண் கொஞ்சும் பசும் புல்லும் விண் துஞ்சும் நேரமது வீழும் ஆங்கொரு செடியது இலை விடும் காம்பொன்று மொட் டொன்று ஏந்தும் காற்று வருட இதழ்கள் வி...

எது நல்வாழ்வு

மண் கொஞ்சும் பசும் புல்லும்
விண் துஞ்சும் நேரமது வீழும்
ஆங்கொரு செடியது இலை விடும்
காம்பொன்று மொட் டொன்று ஏந்தும்
காற்று வருட இதழ்கள் விரிக்கும்
பரவும் மணத்தின் சுகந்தம் நிரந்தரம்
பாழும் மனம் வாழஎதை நாடும்
அன்றுதோன்றி அன்றுமடியும் புல்லா,
நின்று மணக்கும் மலர் செடியா.
முன்னது சுகமானால் பின்னதுசீரிய சிந்தையாமோ
!






கோதைதனபாலன்

Wednesday 8 February 2012

View Point: காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்ஒளி சிந்த...

View Point: காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்ஒளி சிந்த...: காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள் ஒளி சிந்துமோ, சுடர்விடுமோ ! இமைசாயும் கண்ணில் பதுங்கு மோ விழிகள் ! தந்திடுமோ வண்ணக் கனவுகள் !...
காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்
ஒளி சிந்துமோ,   சுடர்விடுமோ !
இமைசாயும் கண்ணில் பதுங்கு
மோ  விழிகள் !
தந்திடுமோ வண்ணக் கனவுகள் !
காலை வரை இதுவே   மாயம் என
ஆகாயம் காட்டும் வித்தை தானோ   !


                                           




 கோதைதனபாலன் 

Monday 6 February 2012

View Point: இரவு வணக்கம்

View Point: இரவு வணக்கம்: மறையும் கதிரவன் மலையுள் மறைந்தால் உறங்கும் விழிகள் கண்ணுள் மறையுமோ சுடரும் கதிர்கள் விடியல் அறியுமானால் ஊமை நினைவதனில் கனவுகள்...

இரவு வணக்கம்





மறையும் கதிரவன் மலையுள் மறைந்தால்  
உறங்கும் விழிகள் கண்ணுள் மறையுமோ 
சுடரும் கதிர்கள் விடியல் அறியுமானால்  
ஊமை நினைவதனில் கனவுகள் படருமோ !!  
 





கோதைதனபாலன்