Thursday 1 September 2011

அவள் அவளாகவே...

ரவிவர்மா ஓவியம்







அவள் நினைத்தால் 
 சாதிப்பது   எத்தனையோ
அவள் வெறுத்தால் 
அங்குலம் பெயராது 

அவள் ஆசை அதிகமெனில்
நன்சொல் தவிர்ப்பாள்
விடும் கண்ணீரில் வீழ்வாள்

அவள் அன்பு மிதமிஞ்சின் 
தெரிந்தும் ஏமாறுவாள்


 அடிமை என வாழ்வாள்



அவள் உணர்ச்சி  பிழம்பானால்    
வாழ்க்கை புயலில்
புரண்டெழும் பெண்மணி 




அவள் அடுப்பங்கரையில்
ஒளியின் ஒழித்தாள்
 புதுமை ஆக்க உணர்வுகளை 




அவள் அவ்வுணர்வு காட்டினாள் 
குடும்பத்தார் பாசத்தில்
வட்டத்தில் நின்றிடுவாள்


அவள் பூவுலகில்
ஏட்டிலும் எழுத்திலும் மட்டுமே 
தெய்வப் பெண் !வாழ்வில் சராசரி!  
ஏன்....? ஏன்....?  
அவள் அவளாகவே இருக்கிறாள் .












No comments:

Post a Comment