Wednesday, 31 August 2011

பக்தியில் கரையும் லஞ்சம்

கோயில் உண்டியலில்  
இடும் காணிக்கை  
தெய்வத்திற்கு லஞ்சமன்று  
கோயிலுக்கு நமது  வருமானம்  
கருவறையில் கால் கடுத்திருக்க  
ஆராதனை காட்டாது 
தட்டில் எடு பிரசாதம் என்றவர்  
தீபத் தட்டில் வந்தவர்    
பணம் ஐம்பது விழ  
கணநேரத்தில் தீபாராதனை  
முந்தி வந்தவர் ,பிந்தி வந்தவர்    
மனம் ஒன்றிய பிரார்த்தனை  
இங்கு ஐம்பது, தெய்வ லஞ்சமா   
பக்தியில் கரைந்த மாயம் யாதோ 
மறைந்துள்ள பொருள் என்னவோ  
பகர்வாய் நன் நெஞ்சே !


No comments:

Post a Comment