Friday 24 February 2012

எது நல்வாழ்வு

மண் கொஞ்சும் பசும் புல்லும்
விண் துஞ்சும் நேரமது வீழும்
ஆங்கொரு செடியது இலை விடும்
காம்பொன்று மொட் டொன்று ஏந்தும்
காற்று வருட இதழ்கள் விரிக்கும்
பரவும் மணத்தின் சுகந்தம் நிரந்தரம்
பாழும் மனம் வாழஎதை நாடும்
அன்றுதோன்றி அன்றுமடியும் புல்லா,
நின்று மணக்கும் மலர் செடியா.
முன்னது சுகமானால் பின்னதுசீரிய சிந்தையாமோ
!






கோதைதனபாலன்

No comments:

Post a Comment