Saturday, 28 January 2012

View Point: ஒரு இரவு வணக்கம்

View Point: ஒரு இரவு வணக்கம்: பகலது நனவோடுதான் காணும் உணர்வோடு இரவது நினைவோடுதான் உணரும் கனவோடு என்று சொல்லி சுழலுவதுதான் காலம் ....என விடை பெறும் நேரம் வந்தது ...

ஒரு இரவு வணக்கம்


பகலது நனவோடுதான்
காணும் உணர்வோடு

இரவது நினைவோடுதான்
உணரும் கனவோடு
என்று சொல்லி
சுழலுவதுதான் காலம் ....என

விடை பெறும் நேரம் வந்தது
விடியலை காண விரைந்து...




கோதைதனபாலன்








View Point: ஒரு கோலவெறி

View Point: ஒரு கோலவெறி: வெண்பனி அணைந்தால் வான் மடியில் கோலவெறி கொள்ளும் நிலவே இருள் சூழ்ந்து நின்றால் கொள்ளை அழகு கொள்வாயோ கண் மயங்க...

ஒரு கோலவெறி





வெண்பனி அணைந்தால் வான் மடியில்  
 
கோலவெறி கொள்ளும் நிலவே  
 
இருள் சூழ்ந்து நின்றால்  
 
கொள்ளை அழகு கொள்வாயோ   
 
கண் மயங்கினேனடி கனவு கலைக்காதே  
 
விடியும் வரை காத்திடு நல்ல மனங்களை...!  


கோதைதனபாலன்  

Saturday, 14 January 2012

View Point: ஒரு விரக்தியின் நிழல்

View Point: ஒரு விரக்தியின் நிழல்: மீனவர் வாழுமிடம் பாலையாய்குறுகிய தனுஷ்கோடி அரிச்சமுனை வாழும் மக்களும் வாழ்த்தும் மக்களும் எப்புறமும் இருக்க ஒரு புற...

ஒரு விரக்தியின் நிழல்

 மீனவர் வாழுமிடம்  
பாலையாய்குறுகிய தனுஷ்கோடி  
அரிச்சமுனை  

 



வாழும் மக்களும் வாழ்த்தும் மக்களும் எப்புறமும் இருக்க 
 ஒரு புறம் ஒரு கோடியில்,  தனுஷ்கோடி விட்டு,

பலமுறை 
அரசு சொல்லியும், ஏற்ற இடம் அளித்தும்
வர மறுக்கும் மீனவ  அன்பர்களே !  
எங்களுக்கும் உங்கள் கவலையில் பங்குண்டு  

கடலுடன் பிறந்தவர் கடலோடு முடியட்டும் 
என்ற நினைவெதற்கு? இடையில்                                           ஒரு விரக்தியின் நிழல் 
யாரும் போவர் யாரும் வருவர். 
யார் நிற்பர் என்று யார் அறிவர் ?
கடல் கொள்ளும் உறவு மண்ணுடன்
என்றும் பொருந்துமோ? நிற்குமோ ?   
மண்கொள்ளும் உறவோ அது
மறைவது ,கரைவது பின் நிற்குமோ?                                                          கோதைதனபாலன் 
இருவரிடமும் உங்கள் உயிர் ,உறவுகள் 
ப்ணயக் கைதிகள், உங்கள் உணர்வுகள்
ஆர்பரிக்கும் அலைகள் அன்றி ஆழ்கடல் அமைதியாகா,
வீணே குறுகிவிட்ட நிலமீதில்,தனிமை படுத்தி 
வாழத்துடிப்பது யாரிட்ட சாபம்
உறவுகளை நினையுங்கள், விரக்திதனை தள்ளுங்கள்
விவேகம் கொள்ளுங்கள், வெற்றி நிலம் காணுங்கள்..!
இயற்கை போராட்டம் வெற்றியாகத்தான் மாறனும்
விரக்தியில் வீழல் கூடாது..
உங்கள் நினவின் நிழலாய்
மனம் உருகி உரைத்திட்டேன்...